விடுதலை செய் பெண்ணே!!!
பெண்ணே!
உன்னை பார்த்த பொழுதினிலே!
என் இதயம் தன்னை மறந்தது;
மூளை அதை தடுக்க முயன்றது;
காரணத்தை எண்ணி தவித்தது;
ஏனோ அதற்கு தெரியவில்லை,
உன் பார்வையிலே காந்தம் வைத்து ஈர்த்து விட்டாயென்று;
உன் சிரிப்பினிலே பொறி வைத்து சிறையிலடைத்து விட்டாயென்று;
உன் மௌனத்தால் என் மனதை கொள்ளை கொண்டாயென்று;
ஆதலால்,
அது வார்த்தைகளை கோர்க்க மறந்து, பேச்சுரிமையை என்னிடமிருந்து பறித்து, உன்னிடம் சரணடைய செய்துவிட்டது;
இந்நிலையில் என்னை வைத்து'இன்பம்' கண்டது போதும்,
உன் மனதை நீ கேட்டு
அதன் முடிவை உரக்க சொன்னால்
இக்கைதி விடுதலைப்பெற்று
உன்னுடன் வாழ்வேன் நூறு ஆண்டுகள்!!!
உன்னை பார்த்த பொழுதினிலே!
என் இதயம் தன்னை மறந்தது;
மூளை அதை தடுக்க முயன்றது;
காரணத்தை எண்ணி தவித்தது;
ஏனோ அதற்கு தெரியவில்லை,
உன் பார்வையிலே காந்தம் வைத்து ஈர்த்து விட்டாயென்று;
உன் சிரிப்பினிலே பொறி வைத்து சிறையிலடைத்து விட்டாயென்று;
உன் மௌனத்தால் என் மனதை கொள்ளை கொண்டாயென்று;
ஆதலால்,
அது வார்த்தைகளை கோர்க்க மறந்து, பேச்சுரிமையை என்னிடமிருந்து பறித்து, உன்னிடம் சரணடைய செய்துவிட்டது;
இந்நிலையில் என்னை வைத்து'இன்பம்' கண்டது போதும்,
உன் மனதை நீ கேட்டு
அதன் முடிவை உரக்க சொன்னால்
இக்கைதி விடுதலைப்பெற்று
உன்னுடன் வாழ்வேன் நூறு ஆண்டுகள்!!!
Comments
Post a Comment