முழுமை உண்டோ???

என்றாகினும் ஒருநாள் 
கடந்து வந்த பாதையை நினைக்க 
கண்கள் மூடும் - அந்தொருநாள் 
நினைத்ததையெல்லாம் முடித்துவிட்டேன் 
என்ற எண்ணம் தோன்றுமாயின் 
வாழவில்லை என்றே பொருள்!!!

பலவற்றை நினைத்து 
சிலவற்றை  தொடங்கி - அதில் 
சில வெற்றிகளையும் 
பல நினைவுகளையும் - ஏந்தியே
பூமியில் காலம் முற்றுகிறது 

    -    முத்துக்குமார்  கொளஞ்சிராஜன்

Comments

Popular Posts